Thursday, December 31, 2009

செல்கிறேன்


காதலற்ற வெளியில்
பயணிக்கிறேன்
கவிதை துணைகொண்டு ...
ஈர்ப்பற்ற இவ்விடத்திலும்
சகபயணிகள் ...
தூரத்து கிரகமாய்
கரும்புள்ளியாய் நீ ...
வெளியின் இருளுக்குள்
காணாமல் செல்கிறேன்

Wednesday, December 23, 2009

நீயில்லாத இரவு


தனிமை இரவுகளில்

இருமலின் நடுவில்

விழிக்கும்போது

உணர்கிறேன்

நீரில்லாததையும்...


நினைவுகளை

கட்டியணைத்து

மீண்டும் உறங்குகிறேன் !


பொய்களோடு...

காலையில் சூடான

பொய்யோடு எழுப்புவாய்
அன்றைய தினம் முழுதும்
எனக்கான பொய்கள்
நிறைய இருக்கும்
உன்னிடம் ...

கேட்கும்போதெல்லாம்
புன்னகையுடன்
மனப்பையில் இருந்து
பொய்களை எடுத்துத்தருவாய்!

சிலநேரம்
புன்னகையும் பொய்யாய் ...
பொய்களெல்லாம்
தீர்ந்தபின்
அடி ஆழத்தில்
தட்டுப்படும்
காதலையும்
பொய்யென்று
தந்துவிடாதே !

Friday, December 18, 2009

விலகிச் செல்லாதே


பல யுகங்களுக்குப் பிறகும்
ஜென்மம் ஜென்மமாய்
சேர்த்து வைத்த
காதலை இசைக்கிறேன்!

உனக்கான எனது இசை
உலகமெல்லாம் காதலை
நிரப்புகிறது!

நதிகள், கடல்கள்,
மலைகள்,வான் வெளிகள்,
முடிவாய் எல்லா
உலகங்களையும்
மூழ்கடித்து ...
...
...
ஒருநாள்
உன் இதயம் தொட்டுவிடும்!

Thursday, November 26, 2009

காதலருவி


அருவியாய் விழும்
காதலுக்கு அணை
போட முடியாது !
வேண்டுமானால்
நனைந்து கொள்
!

பூவே


உன் தோழிகளோடு நீ!
பூக்களின் நடுவே
ஒரு தேவதை
பார்க்கிறேன் நான்!

பிரிய காதலி

<

Tuesday, November 10, 2009

சிரிப்பு


பிறந்த நாள் ,
இனிப்பெடுத்துக்கொள்
என்று சிரித்தாய் . . .
சிரிப்பெடுத்துக்கொண்டேன்!

Monday, November 9, 2009

தராமலே செல்கிறாய்!

பிறந்தநாளன்று,
உனக்கு சாக்லேட்
பிடிக்குமே என்று
நிறைய தந்தாய்,
உன்னையும் தான்
பிடிக்கும்,
தராமலே செல்கிறாய்!

பிறந்த நாள்


உன் பிறந்த நாள் என்று

காலையில் எழுந்து

தலை முழுகி

புத்தாடை யுடுத்தி

கோயில் சென்று தொழுது

எல்லோருக்கும் இனிப்புகளைப்

பகிர்ந்து பின்

உன்னைப்பார்க்க வருகையில்

.


.

.

.

அவனுக்கு கேக்
ஊட்டிகொண்டிருந்தாய் !

Monday, October 26, 2009

முதல் முத்தம்


கால்களின் கீழ் பூமி நழுவ ,

மேகங்களுக்கிடையில்,

பூக்களின் வாசனை பூசி ,

காற்றோடு கலந்து

நீலக்கடல் மீது பறந்து ...



திரும்பி வந்து பார்த்த போது

முத்தம் முடிந்திருந்தது !

இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை

முதல் முத்தத்தை போலவே

உன்னையும் !

Thursday, September 17, 2009

என் கடலும் உன் காதலும்


கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் - உன்
காதலை நினைவுப்படுத்தியது!


அலைகள் கால் தொடுகின்றது -நீ
மனம் தொட்டாய்!


காற்று குளிராய் தழுவியது -நீ
காதலாய் தழுவினாய்!


அது சுனாமியால்தாக்கியது
நீ வார்த்தையால் !


உப்பாய்கரித்தது
என் கண்ணீரும்,
அந்த கடல் நீரும்!


வீடு சேரும் வரை
ஷுவுக்குள் மணலாய்
உறுத்திகொண்டிருந்தது ....

Thursday, September 10, 2009

நீ - நான் - நிலா



பௌர்ணமி பொழுதில்

மலை சுற்றும்

பாதையில் ,

என்னோடு சுற்றியது

நிலவும் உன்

நினைவும்!

எங்கே சென்றாயடி?

கண்ணான கண்மணியே
காதலெல்லாம் போனதெங்கே?-தமிழ்ச்
சொல்லான அழகுப்பெண்ணே
சொல்லாமல் போனதெங்கே?

முத்தம் பெறும் ஆசையத்தான்
மொத்தமா வச்சிருந்தேன் -எனது
சித்தம் கலக்கிவிட்டு நீ
சிறகடித்து போனதெங்கே ?

எட்டு திசயிருக்கு நீ
போன திசை தெரியலயே -நிலவு
சுட்டுவிட்டு போனாலும்
பாவி மனம் மாறலையே !

சுத்தி வந்ததிரு நெஞ்சும் உன்
சித்தப்பன் தோப்புக்குள்ள -இன்று
பத்தி எரிவதொரு நெஞ்சம்
இதென்ன நீதி புள்ள ?

சீமை சரக்கடிச்சாலும் உண்
சிரிப்பு சத்தம் கேட்குதடி -இழவு
ஆமை போல சுமைகளைத்தான்
சுமக்கிறேன் என் மனசிலடி!

போனதெல்லாம் போகட்டும் நீ
நல்லாயிரு தாயி -எனக்கு
கடைசி ஆச ஒன்னுருக்கு
உம்புள்ளைக்கு எம் பேர வையீ !