
காதலற்ற வெளியில்
பயணிக்கிறேன்
கவிதை துணைகொண்டு ...
ஈர்ப்பற்ற இவ்விடத்திலும்
சகபயணிகள் ...
தூரத்து கிரகமாய்
கரும்புள்ளியாய் நீ ...
வெளியின் இருளுக்குள்
காணாமல் செல்கிறேன்

அலைகள் கால் தொடுகின்றது -நீ
மனம் தொட்டாய்!
காதலாய் தழுவினாய்!
கண்ணான கண்மணியே