Thursday, September 17, 2009

என் கடலும் உன் காதலும்


கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் - உன்
காதலை நினைவுப்படுத்தியது!


அலைகள் கால் தொடுகின்றது -நீ
மனம் தொட்டாய்!


காற்று குளிராய் தழுவியது -நீ
காதலாய் தழுவினாய்!


அது சுனாமியால்தாக்கியது
நீ வார்த்தையால் !


உப்பாய்கரித்தது
என் கண்ணீரும்,
அந்த கடல் நீரும்!


வீடு சேரும் வரை
ஷுவுக்குள் மணலாய்
உறுத்திகொண்டிருந்தது ....

1 comment:

Raj said...

Wonderful, Superb! Satish you really rocked.... Keep up the spirit, i need to see lots of posts in future.