Wednesday, December 23, 2009

பொய்களோடு...

காலையில் சூடான

பொய்யோடு எழுப்புவாய்
அன்றைய தினம் முழுதும்
எனக்கான பொய்கள்
நிறைய இருக்கும்
உன்னிடம் ...

கேட்கும்போதெல்லாம்
புன்னகையுடன்
மனப்பையில் இருந்து
பொய்களை எடுத்துத்தருவாய்!

சிலநேரம்
புன்னகையும் பொய்யாய் ...
பொய்களெல்லாம்
தீர்ந்தபின்
அடி ஆழத்தில்
தட்டுப்படும்
காதலையும்
பொய்யென்று
தந்துவிடாதே !

3 comments:

rvelkannan said...

Very nice Sathish

sweetsatheesh said...

nanri nanbare

arasan said...

Super... keep it up ur good work Sathish